search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்"

    வாழப்பாடியில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் போலீசார் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மட்டுமின்றி அவருடன் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்டம் முழுவதும் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜ் ஜார்ஜ் உத்தரவின் பேரில், போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்ய மூர்த்தி வழிகாட்டுதலின் பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர்கள் கோபால், சுந்தரராஜன் மற்றும் போலீஸார், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் அமர்ந்து செல்லும் ஆண், பெண் இருபாலரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பது கட்டாயம் என்பதால், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென, வாழப்பாடி போலீசார் அறிவுரை வழங்கினர்.

    ×